‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவிற்கு பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை பரினாவுக்கு தற்போது பிரசவ காலம் நெருங்கி இருக்கும் நிலையில் அவருக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது.
நடிகை பரினா
மீடியா துறைக்குள் ஒரு விஜேவாக நுழைந்து சின்னத்திரையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை பரினா. நடிப்பு மீது ஆர்வம் இல்லாமல், நடிப்பு என்பதை கற்றுக்கொள்ளாமல் கூட சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த விஜே பரினா தற்போது விஜய் டிவியில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல முடியும். அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா கதாப்பாத்திரத்தின் மீதான பரினாவின் நடிப்பு பலராலும் பேசப்பட்டு வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய பின் ஐஸ்வர்யா செய்யும் காரியம் – ரசிகர்கள் உற்சாகம்!
இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஒரு முக்கிய வில்லியாக கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்த நடிகை பரினா தற்போது இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறாராம். அதாவது திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை பரினா தனது பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு சில காலம் விலகி இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலிலும் வெண்பா ஜெயிலில் இருப்பது போல சில காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை ரோஷினியின் கடைசி எபிசோட் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இதற்கு மத்தியில் பிரசவத்தை எதிர்பார்த்திருக்கும் பரினாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விரைவில் அம்மாவாகப் போகும் நடிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அதே போல நடிகை பரினாவுக்கு வலைதளங்கள் வழியாகவும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இப்படி இருக்க பரினாவின் பிரசவ நாட்கள் நெருங்கி இருப்பதால் அவருக்கு பிறக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.