பணத்தை மீட்டு பாக்கியாவிடம் தந்த எழில் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பணத்தை இழந்து அவமானப்பட்டு நிற்கும் பாக்கியாவுக்கு, இழந்த பணத்தை எழில் மீட்டுக் கொடுப்பவாறு அடுத்த கட்ட கதைக்களம் நகர இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. குடும்பத்தாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பெரிய சமையல் ஆர்டரை எடுத்து சிறப்பாக செய்து முடிக்கும் பாக்கியா, அதற்காக 3 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார். இந்த பணத்தை சில தெரியாத நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து இழந்து விடுகிறார் அவர். இதனால் பாக்கியாவுடன் வேலை செய்தவர்கள் வந்து பணத்தை கொடுக்க வேண்டும் என கேட்க பல்வேறு சிக்கல்கள் எழுகிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ போட்டியாளர் நமீதாவிற்கு ரெட் கார்டு – வெளியான ஷாக் ரிப்போர்ட்!
இப்போது பாக்கியாவுக்கு உதவி செய்வதாக கூறி பணம் தர முன்வரும் கோபியின் அப்பா மேற்கொள்ளும் முயற்சியும் தோல்வியில் முடிவடைகிறது. இந்த கதைக்களத்துடன் இதுவரை ஒளிபரப்பான ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதையில் தற்போது ஒரு திடீர் திருப்பம் ஏற்பட இருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் புதிய ப்ரோமோவில் பேங்கில் இருந்து பணம் கிடைக்காமல் வெறும் கையோடு வீட்டுக்கு வருகிறார் பாக்கியா.
மறுபக்கத்தில், பணத்துக்காக வீட்டுக்கு வெளியே நிற்கும் நபர்களிடம் கோபியின் அப்பா இன்னும் ஒரு நாள் மட்டும் காத்திருக்குமாறு கெஞ்சுகிறார். ஆனால் பணத்தை வாங்காமல் அங்கிருந்து செல்ல மாட்டோம் என அவர்கள் அங்கேயே நிற்கின்றனர். இப்போது கோவத்தில் கொந்தளித்த கோபி, பாக்கியவை இழுத்து வீட்டுக்கு வெளியே தள்ளி விடுகிறார். கீழே விழ செல்லும் பாக்கியாவை தாங்கிப் பிடித்த எழில், பாக்கியா இழந்த மொத்த பணத்தையும் அவரது கையில் கொடுக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.