2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அதில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் பல நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதில் மத்திய அரசு ஆயுஷ் மான் பாரத் யோஜனா திட்டத்தின் தொகை இரு மடங்காக உயரும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அந்த அறிவிப்பிற்கு பின் நோயாளிகள் இலவசமாக ரூ.10 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.
இந்த திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கியது. இதனை தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தற்போது ஆண்டுக்கு 5 லட்சம் வரை சிகிச்சையை சுமார் 12 கோடி குடும்பங்கள் பெற்று வருகின்றன. இந்நிலையில் காப்பீட்டு தொகையை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை பயன்பெறுவோர் எண்ணிக்கையை விட 100 கோடியாக எண்ணிக்கையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ரூ.600க்கு சிலிண்டரை பெறுவது எப்படி? முழு தகவல் இதோ!!