முன்னணி வங்கியில் வேலைவாய்ப்பு – 50, 000 பேரை பணியமர்த்த திட்டம்!
இந்தியாவின் முன்னணி வங்கியான ஆக்சிஸ் வங்கி சுமார் 50,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக வங்கியின் மனிதவள தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் வங்கி துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் அதன் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தனியார் வங்கிகள் வரவிருக்கும் ஆண்டில் சுமார் 50,000 பேரை ஜூனியர் பதவிகளில் பணி அமர்த்தும் என வங்கியாளர் மற்றும் ஆட்கள் சேர்ப்பு நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் முன்னணி தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் சுமார் 50,000 பேரை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக வங்கியின் மனிதவள தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
Indigo நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இது குறித்து பேசிய அவர், இந்த நடவடிக்கை கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டில் மட்டும் வளாக மற்றும் கல்வித் திட்டங்களின் கீழ் சுமார் 3000 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.