விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி, ராதிகா திருமணம்? அதிருப்தியில் ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது வரும் காட்சிகள் மற்றும் அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களை குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சர்ச்சையில் பாக்கியலட்சுமி:
சின்னத்திரை சீரியல்கள் என்பது பலரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டது. குழந்தைகளுக்கு என்று சிறப்பு நிகழ்ச்சிகள் வந்தாலும் அனைத்து விஷயங்களையும், நிகழ்ச்சிகளையும் தான் குழந்தைகள் கவனிக்கின்றனர். தற்போதைய சமயத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் பள்ளிகளுக்கோ அல்லது வெளி இடங்களுக்கோ செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் குழநதைகளும், பெரியவர்களுடன் சேர்ந்து சீரியல்களை பார்த்து வருகின்றனர்.
மீண்டும் கண்ணம்மாவை குறை கூறும் பாரதி – இது தான் சீரியலின் அடுத்த ட்விஸ்டா? ரசிகர்கள் ஷாக்!
இதனால் சமூக அக்கறையுடன் அனைத்தையும் ஒளிபரப்ப வேண்டிய நிலை சேனல்களுக்கு உள்ளது. முக்கியமாக சீரியல்கள் என்பது தவிர்க்க முடியாத பொழுது போக்காக மாறியுள்ள நிலையில், குழந்தைகள் மனதை பாதிக்காத வகையிலான காட்சிகள் ஒளிபரப்பாதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வரும் கதைக்களம் குடும்ப கதையாக பார்க்கப்பட்டாலும், சமீப நாட்களாக வரும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த தனம் – வைரலாகும் வீடியோ!
பாக்கியாவின் கணவர் கோபி தனது குடும்பத்திற்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் பழகி வருகிறார். அவரது மூத்த மகனுக்கே திருமணம் முடிந்து விட்ட நிலையிலும், அந்த பெண்ணை தான் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வாக்குறுதி கொடுத்து பழகி வருகிறார். இந்த காட்சிகளே தவிர்க்கப்பட வேண்டிய நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிவது போல் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் சீரியல் இனி வரும் நாட்களில் எவ்வாறு செல்லப்போகிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.