TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு! முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும், நிச்சயமாக வெற்றி பெறலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. மேலும் முதல் நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் இதற்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் முதல்நிலைத் தேர்வு 2021-ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் டிசம்பர் 14ம் தேதி வெளியாகின. இதில் முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றது. தற்போது, குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற 137 பேரின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. அடுத்ததாக நேர்முகத் தேர்வு சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும் தேர்வர்கள் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இதுதொடர்பான தகவல் தேர்வர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC GROUP 1 பொது ஆய்வுகள் பகுதிக்கான மாதிரி தேர்வும் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://bit.ly/3OIkeev
Mock Test “WhatsApp Group” Join Now