தீபாவளிக்கு பயணம் செய்ய இருப்பவர்கள் கவனத்திற்கு – ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு!
அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை நடப்பு ஆண்டில் வர உள்ளதால் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்:
நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க சிறந்த வழியாக இருப்பது ரயில் பயணம் தான். கட்டணம் குறைவு என்பதோடு மட்டுமின்றி பயணத்தில் சவுகரியங்களும் அதிகமாக இருப்பதும் தான் மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்ய காரணமாக உள்ளது. இதனால் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் ரயில்களில் அதிக அளவில் இருக்கும்.
இதனை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் பண்டிகை காலங்களில் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதற்கான அறிவிப்புகளும் முன்கூட்டியே வெளியிடப்படுகின்றது. தற்போது அக்டோபர் 24ம் தேதி வர இருக்கும் தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் நாகர்கோவில் – பெங்களூரு இடையே சிறப்பு ரயிலை கூடுதலாக இயக்க உள்ளது. இந்த ரயிலானது அக் .25ம் தேதி நாகர்கோயிலில் இருந்து பெங்களூருக்கும், அக்.26ம் தேதி மறுமார்க்கமாக காலை 10:15 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 12:20 மணிக்கு நாகர்கோயிலை வந்து சேருகிறது.
தமிழக மாணவர்களுக்காக கல்வித்துறை கையில் எடுத்துள்ள மாஸ் திட்டம் – அரசின் அசத்தல் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த சிறப்பு ரயிலில் 2 பார்சல் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 9-இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், ஒரு 2-அடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களின் வழியாக செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்