PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்புச் செலவை உயர்த்தியிருக்கிறது. மேலும், அது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
PNB வங்கி சேவைகள்
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு KYC செயல்முறையை புதுப்பிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது. அதாவது, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் கட்டாயமாக KYC செயல்முறையை புதுப்பித்திருக்க வேண்டும். இதற்கு முன்பு KYC செயல்முறையை புதுப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி வரைக்கும் ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது. இதற்கு பின்னர், கால அவகாசம் நீடிக்கப்பட்டு KYC செயல்முறையை புதுப்பிக்க ஆகஸ்ட் 31 வரைக்கும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
EPFO பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வாழ்க்கை சான்றிதழ் பற்றிய அப்டேட்!
மேலும், ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. அதாவது, வங்கி வாடிக்கையாளர்களின் அடையாளம், முகவரி மற்றும் நிதி வரலாறு ஆகியவற்றின் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளவும், சட்டவிரோதமாக நடைபெறும் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும் இந்த KYC செயல்முறை தான் வங்கிகளுக்கு பெரிதும் உதவுகிறது. இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி இன்று முதல் நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்புச் செலவை (MCLR) 0.05 சதவிகிதம் வரைக்கும் உயர்த்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
நிதி அடிப்படையிலான கடன் விகிதம் உயர்த்தப்பட்டுவிட்டதால் பெரும்பாலான நுகர்வோர் கடன்கள் விலை உயர்த்தப்பட்டுவிட்டது. மேலும், கார், வாகனம் மற்றும் தனிநபர் போன்ற நுகர்வோர் கடன்களுக்கு ஓராண்டு கால MCLR 7.70 சதவீதமாக இருக்கும் என பஞ்சாப் நேஷனல் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதே போல ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாதத்திற்கான விகிதம் 7.10 முதல் 7.40 சதவீதமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்