ஓய்வுக்காலத்தில் ரூ.10,000 வருமானம் – அரசின் புதிய திட்டம்… மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

0
ஓய்வுக்காலத்தில் ரூ.10,000 வருமானம் - அரசின் புதிய திட்டம்... மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

ஓய்வு காலத்தில் கணவன், மனைவி இருவரும் பயன்பெற கூடிய வகையில் ரூ.10,000 மாத வருமானத்தை வழங்கக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை அரசானது செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ஓய்வு காலத்தில் வருமானம்:

இந்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்கு பின் அவர்களது முதுமை காலத்தை எவ்வித இடையூறும் இன்றி நடத்த ஓய்வூதியம் வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இதனை போலவே தனியார் நிறுவன ஊழியர்களும் ஓய்வூதியத்தை பெற அரசானது வழிவகை செய்துள்ளது. அதாவது இந்திய அரசால் 2015ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் தனியார் நிறுவன ஊழியர்களும் ஓய்வூதியம் பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் 8 சதவீத வருமானம் வழங்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2024 – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணலை மட்டுமே!

இத்திட்டத்தின் பலனை 18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே பெற இயலும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் மாதத்திற்கு ரூ.210 வீதம் 18 ஆண்டுகள் செலுத்தினால் ஓய்வுக்கு பின் ரூ.5000 மாத வருமானமாக பெறலாம். இத்தகைய திட்டத்தில் கணவன், மனைவி இருவருமே இணைத்து கொள்ளலாம். அவ்வாறு இருவரும் இத்திட்டத்தில் இணைத்தால் மாதம் ரூ.10,000 வரை வருமானம் பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பயனர்கள் 60 வயது பூர்த்தி அடைந்த பின்பே பெற இயலும். இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!