தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு 10, 11ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு? அதிகாரிகள் விளக்கம்!
தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கால செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படலாம் என மதிப்பெண் நிர்ணய குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா தொற்றினால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நோய் பாதிப்பு சற்று குறைந்த பிறகு 2021 ஜனவரி முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகினர். செய்முறை தேர்வும் நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும், மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்விற்கு தயாராக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
TN Job “FB Group” Join Now
மீண்டும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததும் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. தற்போது வரை கொரோனா தாக்கம் குறையவில்லை. புதிய கல்வியாண்டும் தொடங்கி விட்டது. அதனால் தமிழக அரசு இந்த வருடம் பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!
கடந்த வருடம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. ஒரு பருவத்தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வு மட்டுமே நடைபெற்றுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடந்த திருப்புதல் மற்றும் பருவத்தேர்வுகளின் மதிப்பெண்களையும் சேர்த்து கணகிடப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ள மாணவர்களின் வருகை பதிவேடும் மதிப்பெண் மதிப்பிட்டு முறையில் சேர்த்து கொள்ளப்படும் என மதிப்பெண் நிர்ணய குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.