ஜூலை 14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் நாளை (14.07.2021) மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் கடந்த கடந்த சில தினங்களாக மின்தடை அதிகம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் மின் வாரியத்தில் புகார் அளித்து வருகின்றனர். முன் அறிவிப்பில்லாமல் ஏற்படும் மின்தடையால் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் வேலை பாதிக்கப்படுவதாகவும் புகார் அளித்தனர். இது குறித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – முதல்வர் வலியுறுத்தல்!
தற்போது மாவட்ட வாரியாக மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் தான் மின்தடை ஏற்படுகிறது என விளக்கம் அளித்தார். அதன் படி ஒவ்வொரு பகுதிகளாக மின்தடை செய்யப்பட்டு மின் ஊழியர்கள் மூலம் மின்கம்பங்கள் மாற்றுதல், மின் கடத்தும் கம்பிகள் மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகத்தை மின் வாரியம் தடை செய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (14.07.2021) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் அபிராமம், கமுதி நகர், முதுகுளத்தூர், கீழராமந்தி, பார்த்திபனூர், செங்கபடை, பேரையூர், மண்டல மாணிக்கம், ஆகிய பகுதிகளில் ஜூலை 14 நாளை வெள்ளிக்கிழமை அன்று கமுதி துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.