தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புதல் வழங்குதல் சேவை கொரோனா பரவல் காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 1) முதல் அந்த பணிகள் படிப்படியாக தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் அரசு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 மற்றும் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதம் முதல் இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு திட்டம் – ரூ.10 லட்சம் வரை கடன்!
மேலும் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் மூலமாக கூட்டம் கூடாமல் விரைவாக இந்த நிவாரணம் வழங்கப்பட்டது. புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி, தற்போது நிவாரண உதவித்தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் இந்த நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அனைத்து முன்கள பணியாளர்களும் கொரோனா நிவாரணம் வழங்கும் பணியிலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோரவேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும்,
TN Job “FB Group” Join Now
புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புதல் வழங்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால், இன்று (ஜூலை 1) முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.