தமிழக மருத்துவ துறையில் அவுட்சோர்சிங் பணியாளர் நியமனம் – அமைச்சர் விளக்கம்!
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டத்திற்கு பின்பு பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவ துறையில் அவுட்சோர்சிங் முறை ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மருத்துவ துறை
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தகுந்த ஊரடங்கு கட்டுப்பாட்டு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (ஜூன் 17) புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டார்.
இந்தியாவில் ஒரே நாளில் 1,587 பேர் பலி – 62,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறியதாவது, புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டுள்ள அரசு பல் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மருத்துவ துறையில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களின் ஊதிய பிரச்சனை குறித்து ஆட்சியர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள், மருத்துவ துறையில் அவுட்சோர்சிங் முறை முழுமையாக ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இதர பணியாளர்களை போல், மருத்துவ துறை பணியாளர்களும் நேரடியாக அரசின் மூலம் நியமிக்கப்படுவர். தமிழகம் முழுவதும் அரசு காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த சுமார் 40 தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.