ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்டரை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – 200 மில்லியன் டாலரில் இந்தியாவில் ஆலை!

0
ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்டரை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - 200 மில்லியன் டாலரில் இந்தியாவில் ஆலை!
ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்டரை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - 200 மில்லியன் டாலரில் இந்தியாவில் ஆலை!
ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்டரை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – 200 மில்லியன் டாலரில் இந்தியாவில் ஆலை!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் Airpods உற்பத்தி செய்வதற்கான ஆர்டரை தைவான் நிறுவனமான Foxconn நிறுவனம் போட்டியிட்டு கைப்பற்றியுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

Foxconn நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் தனது உதிரி பாகங்களை பெருமளவு சீனா நாட்டில் உற்பத்தி செய்து பெற்று வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உற்பத்தி செய்யும் பணிகள் பின்னடைந்து வருகிறது. அத்துடன் சீனா-அமெரிக்கா நாடுகளுக்கிடையில் போட்டி நிலவி வருகிறது. இத்தகைய காரணங்களால் ஆப்பிள் நிறுவனம் தற்போது சீனா நாட்டிற்கான வணிகத்தை கைவிட முயற்சி செய்து வருகிறது.

மேலும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் சீனா நாட்டுடன் ஆன வாணிப உறவை முடித்துக் கொள்ள முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு விஸ்திரா, பாக்ஸ்கான் (Foxconn), பெகாட்ரன் ஆகிய தொழிற்சாலைகள் ஐபோனின் உதிரி பாகங்களை தயாரித்து கொடுத்து வருகின்றனர்.

மத்திய அரசு துறை காலிப்பணியிடங்கள் – விரைவில் நியமனம்.. அமைச்சர் பதில்!

அதன் தொடர்ச்சியாக தற்போது தைவான் நிறுவனமான Foxconn நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் AirPods-களை தயாரிப்பதற்கான ஒப்புதலை Foxconn நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இதற்கான ஆலையை இந்திய நாட்டில் தெலுங்கானா மாநிலத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்பில் அமைக்கவும் Foxconn நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!