பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் தொடக்கம் – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதை, தொடர்ந்து வருகிற ஏப்ரல் 10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தம்
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி இறுதி நாளான இன்று, வேதியியல் கணக்குப்பதிவியல் புவியியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்று வருகின்றது.
மீண்டும் உயிரை காவு வாங்க தொடங்கிய கொரோனா தொற்று – அதிகரிக்கும் பதற்றம்!
இதனைத் தொடர்ந்து, இன்னும் 3 நாட்களில் அதாவது ஏப்ரல் 6ம் தேதி அன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைவதை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற ஏப்ரல் 10ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறும். தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வருகிற மே 5ம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download