தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – நவ.9 ஆங்கில பாடம் ஒத்திவைப்பு!
தமிழகத்தில் கனமழை காரணமாக எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ், ஆங்கில மொழிப் பாடத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
தனித்தேர்வு :
தமிழகத்தில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த நிலையில் 1 9 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ரூ.39 கோடியில் கருணாநிதி நினைவிடம் – அரசாணை வெளியீடு!
தற்போது எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி நாளை எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுகக்கு தேர்வு தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பழனி சுவாமி தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தில் அனுமதி இல்லை!
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தமிழ், ஆங்கில மொழிப் பாடத் தேர்வுகள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதரத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். ஒத்தி வைத்த பாடங்களின் தேர்வு தேதிகள் தேர்வுத்துறையினால் பிறகு அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.