அண்ணா பல்கலைக்கழக புதிய பதிவாளர் நியமனம் – ஒருங்கிணைப்பு குழு தலைவர் உத்தரவு!!
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக கட்டட அமைப்பியல் கல்லூரி முதல்வர் ராணி மரிய லியோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதிய பதிவாளர் நியமனம்:
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பதவிக்காலம் ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் வரை முதன்மை செயலர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு நிர்வகித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பழைய துணைவேந்தர் சூரப்பா பதவியில் இருந்த போது நியமிக்கப்பட்ட பதிவாளர் பேராசிரியர் கருணாமூர்த்தி தற்போது ஓய்வு பெற உள்ளார். இதனால் புதிய பதிவாளராக கட்டட அமைப்பியல் கல்லுாரி முதல்வர் ராணி மரிய லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நிர்வாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், உயர்கல்வி முதன்மை செயலருமான அபூர்வா வெளியிட்ட உத்தரவின் படி,
இன்று முதல் மே 10 வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
“அண்ணா பல்கலைக்கழக பழைய பதிவாளர் பேராசிரியர் கருணாமூர்த்தி பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பதவிக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை ராணி மரிய லியோனி வேதமுத்து நியமிக்கப்பட உள்ளார். அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டட அமைப்பியல் (ஆர்கிடெக்) கல்லூரியின் முதல்வராக தற்போது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.