இன்று முதல் மே 10 வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
ஹரியானா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இன்று (மே 2) முதல் மே 10 வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு என பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
ஹரியானா மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்துக்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,588 ஆக உள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இதனால் ஏற்கனவே அமலில் உள்ள இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள் ஊரடங்கு பலனளிக்காத காரணத்தினால் தற்போது இன்று முதல் (மே 3) அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.