இன்று முதல் 9 மாவட்டங்களில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 7 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு
கொரோனா 2 ஆம் அலை பரவலானது வெகுவாக குறைந்து வரும் பட்சத்தில் ஆந்திர மாநிலத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட படி, கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 9 மாவட்டங்களில் மட்டும் இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 7 வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. தவிர இம்மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் மூன்று மணி நேரம் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கடன் திட்டம்!
அந்த வகையில் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் சித்தூர் ஆகிய இடங்களில் தற்போது நடைமுறையில் உள்ளதான கட்டுப்பாடுகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தளர்த்தப்படும். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, ஆந்திராவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார்.
TN Job “FB
Group” Join Now
இந்த கூட்டத்திற்கு பிறகு ஆந்திர பிரதேசத்தில் ‘கொரோனா பாதிப்பு நிலவரங்களை கவனத்தில் கொண்டு ஐந்து மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் ஊரடங்கை தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா பாதிப்புகளை அதிகம் பதிவு செய்து வரும் பிரகாசம் மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டிப்பதாக ஆந்திரா அரசு தகவல் அளித்துள்ளது.
West news