விஜே சித்ரா நடிப்பில் வெளிவர இருந்த “அன்பே அன்பே” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா, ஜீ தமிழில் “அன்பே அன்பே” சீரியலில் நடிக்க இருந்த நிலையில் அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அன்பே அன்பே சீரியல்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்றாலே நமது நினைவிற்கு வருவது விஜே சித்ரா. அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய இடத்தில் தற்போது காவ்யா அறிவுமணி முல்லையாக நடித்து வருகின்றனர். விஜே சித்ரா இறந்த பின் அவர் நடித்த வெளியான “கால்ஸ்” திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜே சித்ரா வேலை செய்யாத டிவி சேனல் இல்லையாம். அந்த அளவிற்கு கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்.
விரைவில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? இது தான் காரணமா! வெளியான ஷாக் தகவல்!
அவர் இறந்து ஒரு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ரசிகர்கள் மனதில் மக்கள் நாயகியாக வாழ்ந்து வருகிறார். அவரது இழப்பு சின்னத்திரையில் தாங்கி கொள்ள முடியாது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜீ தமிழில் அவர் நடித்து வெளிவர இருந்த புதிய சீரியல் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த சீரியல் பெயர் “அன்பே அன்பே” என்பதாகும். நிஜத்தை போலவே குறும்புத்தனம் உள்ள பெண்ணாக விஜே சித்ரா அந்த சீரியலில் நடித்து இருக்கிறார்.
Vijay TV Bigg Boss 5 Promo | ரூ.12 லட்சத்துடன் வெளியேற முடிவு செய்த சிபி! தடுக்கும் தாமரை!
இது அதிகாரப்பூர்வ ப்ரோமோ இல்லாமல் இருந்தாலும், விஜே சித்ராவின் முகத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். அவர் இருந்திருந்தால் சின்னத்திரையை கலக்கி இருப்பார் என பலர் நினைக்கின்றனர். மக்கள் நாயகி விஜே சித்ராவின் இந்த சீரியல் ப்ரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜே சித்ரா போல கடின உழைப்பாளி மீண்டும் பிறந்து வர வேண்டும் என ரசிகர்கள் தங்களது கோரிக்கைகளை வைத்துள்ளனர்.