திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வசதி!
திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து திருமலைக்கு சென்று 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்யும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் 990 ரூபாய் சிறப்பு கட்டண சலுகையை வழங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி:
இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நேரடி முறையில் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் விநியோகம் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆரம்பத்தில் குறைந்த அளவில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன் கொரோனா குறைந்து வரும் சூழலை ஆராய்ந்து அதற்கேற்றவாறு கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இரட்டிப்பாகுமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தற்போது ஆன்லைன் ,மூலம் 2,50,000 பக்தர்கள் வரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நெட் ஒர்க் வசதி அதிகம் கிடைக்காத இடங்களில் உள்ளோர் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதால் விரைவில் நேரடி முறையில் டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த மாதம் முதல் இலவச தரிசன டிக்கெட் ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தனது இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.
ஒரு டிக்கெட்டின் விலை 990 ரூபாய் ஆகும். டிக்கெட் தேவைப்படும் பக்தர்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் 990 ரூபாய் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்..ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்லலாம். அவர்கள் 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்தில் சென்று 1 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்து விட்டு வரலாம். தரிசனம் செய்துவிட்டு திரும்பிய பக்தர்களுக்கு, டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.