Jio, Airtel பயனர்களுக்கு 3 மாத இலவச இன்டெர்நெட் சேவை? வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!!
சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் Jio மற்றும் Airtel சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாத கால இலவச இன்டர்நெட் சேவைகள் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை இப்பதிவில் காணலாம்.
இலவச இன்டர்நெட்:
இந்தியாவின் மூன்று முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3 மாத இலவச இன்டர்நெட் சேவைகளை வழங்குகிறது என உறுதிப்படுத்தப்படாத வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தவிர ஆன்லைன் வழியாக கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மூன்று மாதங்கள் இலவச இன்டர்நெட் சேவையை வழங்குவது இந்திய அரசின் ஒரு முயற்சி எனவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானது என தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சமூக வலைதளங்களில் வரும் இத்தகைய தகவல்களை பெறுவதற்கு ஒரு Link கொடுக்கப்பட்டு, அதை கிளிக் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும். இவற்றை நாம் கிளிக் செய்யாமல் இருப்பதே சிறந்ததாகும். ஏனென்றால் இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட விவரங்களும், பணங்களும் திருடப்படட்டு வருகின்றன. அதனால் இத்தகைய தகவல்களுடன் வரும் வாட்ஸ் அப் மெசேஜ்களை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Facebook பயனர்கள் தவறாமல் படிங்க – உங்க Account யார் யார் பாத்துருக்காங்கனு தெரிஞ்சுக்க!!
மேலும் இந்த தகவல்களை பார்வேட் செய்வதையும் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு வரும் தகவல்கள் சரியானதா என்பதை தெரிந்து கொள்ள, சந்தேகத்தை ஏற்படுத்தும் இத்தகைய Link கொண்ட தகவல்களை தவிர்க்கவும். மேலும் வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களில் இலக்கண பிழைகள் இருக்கிறதா என்று பார்க்கவும். ஏனென்றால் அதிகாரப்பூர்வ தகவல் அல்லது அறிவிப்பில் இலக்கணப்பிழை இருக்காது. பெரும்பாலும் forward செய்யப்பட்ட வாட்ஸ் அப்மெசேஜ்கள் போலியானதாக தான் இருக்கும். இத்தகைய மெசேஜ்களை வாடிக்கையாளர்கள் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.