AIRTEL பயனர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல் – புத்தாண்டில் விலை ஏற்றம்!

0
AIRTEL பயனர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல் – புத்தாண்டில் விலை ஏற்றம்!

புத்தாண்டு சலுகையாக பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஆஃபர்களை அறிவித்து வரும் நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது பயனர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அதிர்ச்சி தகவல்:

நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் புத்தாண்டு சலுகைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது விலை உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் சமீபத்தில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டண உயர்வை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் ஏ ஆர் பி டபிள்யு இலக்கு ரூபாய் 300 ஆகும். பயனர்களிடமிருந்து நிறுவனத்திற்கு வரும் வருவாய் விகிதம் தான் ஏ ஆர் பி டபிள்யூ என்பதாகும்.

தமிழகத்தில் கூடுதல் நிவாரணத் தொகை – வலுக்கும் கோரிக்கை!!

ஆனால் இதனை ஒரே கட்ட நடவடிக்கையாக செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக ரூபாய் 250 ஏஆர் பிடபிள்யூ அளவை எட்ட வேண்டும். இதற்கு ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது முறையாவது விலை உயர்வை அறிவிக்க வேண்டி இருக்கும். ஏ ஆர் பி டபிள்யூ அதிகரிப்பதற்கு ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலை உயர்வை மட்டும் காரணியாக பயன்படுத்தவில்லை, பெரும்பாலான ஃபியூச்சர் போன் பயனர்கள் ஸ்மார்ட் போனுக்கு மாறுவதன் மூலமாகவும், ப்ரீபெய்ட் பயனர்களை போஸ்ட் பெயிட்டிற்கு மாற்றுவதன் மூலமாகவும் அதிகரிக்க முடியும்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!