விமான டிக்கெட் ரத்து செய்பவர்கள் கவனத்திற்கு – இனி வரித்தொகையும் கிடைக்கும்! ஒன்றிய அரசு உத்தரவு!
தற்போது விமான டிக்கெட்டை ரத்து செய்தால், பயணிகளுக்கு வரித்தொகை திருப்பி செலுத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிய அரசு இந்த வரித்தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமான டிக்கெட்
பொதுவாக விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, வரிகள், பயனாளர் வசதி கட்டணம், விமான நிலைய வளர்ச்சி கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்து விமானத்துறை வசூலித்து வருகிறது. ஆனால் பயணிகள் எதிர்பாராத காரணங்களுக்காக பயண டிக்கெட்டை ரத்து செய்தால், வசூலிக்கப்பட்ட வரி பணத்தை திரும்ப தருவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பயணிகள் தங்களுக்கு வரித்தொகையை சேர்த்து திரும்ப தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இது தொடர்பாக மாநிலங்களவையில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அத்துடன் விமான நிறுவனங்கள் பயணிகள் ரத்து செய்த டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், வரித்தொகையையும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என கனிமொழி அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை பதிலளித்தாவது, விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பயணிகள் ரத்து செய்தாலும் வரித்தொகையுடன் கட்டணம் திருப்பி தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.