பிரபல விமான நிறுவனத்தில் கடந்த 6 மாதத்தில் 3,800 பேர் புதிதாக நியமனம் – 29 கொள்கைகள் வெளியீடு!
இந்திய நாட்டில் பிரபல விமான நிறுவனத்தில் சுமார் 3800 பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
விமான நிறுவனம்
இந்தியாவில் புகழ்பெற்ற டாடா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கியது. இதனை வாங்கியதை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக 470 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீடு கட்ட ரூ.50 லட்சம் கடன்! முழு விவரம் இதோ!
மேலும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்த 200 மில்லியன் டாலர் முதலீடு செய்துடன், விமானங்களை புதுப்பிக்க 400 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்துள்ளது. மேலும் முன்னணி ஐடி நிறுவனங்களில் பணி நீக்கங்கள் தொடரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 3800 பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இதுமட்டுமல்லாமல் ஊழியர்களுக்கான 29 வகையான கொள்கையையும் வெளியிட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் சிறந்து விளங்க இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download