அரசு பள்ளிகளில் சேருவதற்கு வயது தளர்வு – கல்வி இயக்குநரகம் உத்தரவு!
கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்கள் பள்ளிகளில் சேருவதற்கான வயது வரம்பை தளர்த்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கல்வி கற்பதில் எந்த குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வயது வரம்பு
டெல்லியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்கான வயது வரம்பை அதிகரிக்க உள்ளதாக கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. கல்வி விஷயத்தில் எந்தக் குழந்தையும் பின்வாங்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி சேர்க்கைக்கான வயது அளவு கோல்களை தளர்த்துவதற்கான முடிவானது நோய் தொற்றின் தாக்கம் மற்றும் கல்வியாளர்களின் இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை – ரஷ்யாவில் கொரோனா பரவல்!
அந்த வகையில் மாணவர்களுக்கான வயது தளர்த்துதலை அறிவிக்கும் போது, கொரோனா சூழ்நிலை காரணமாக பள்ளியில் சேர முடியாத குழந்தைகளுக்கு, இந்த ஆண்டு சேர்க்கையில் வயது தளர்வு வழங்க முடிவு செய்துள்ளோம் என கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் தற்போது ஆன்லைன் மூலம் திறக்கப்பட்டது.
இதற்காக தேவையான ஆவணங்களின் அடிப்படையில்,
- குழந்தையின் பாஸ்போர்ட் புகைப்படம்.
- 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் மாற்று சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ் அல்லது விண்ணப்பப் படிவத்தின் படிவம் B ன் படி பெற்றோர் பிறந்த தேதி குறித்து பெற்றோரால் மேற்கொள்ளப்படும் சான்றிதழ்.
- முந்தைய வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ்.
- சாதி சான்றிதழ்.
- ஊனமுற்றவர்களுக்கான இயலாமை சான்றிதழ் தேவை என கூறப்பட்டுள்ளது.