தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த ஆலோசனை – ரஷ்யாவில் கொரோனா பரவல்!
ரஷ்யாவில் கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டவர்களின் விகிதம் கடந்த வாரத்தில் 47% ஆக அதிகரித்துள்ளதாக கொரோனா தடுப்பு குழு அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒரு சில நாடுகளில் கொரோனா கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. பல நாடுகளில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த நிலையில் தான் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்புகள் 47% அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் ரூ.2000 & மளிகை பொருட்கள் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!
ரஷ்யா கோவிட் தடுப்பு குழு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 12ம் தேதி மட்டும் 13,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 6ம் தேதி 9,613 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாஸ்கோ நகரத்தில் மட்டும் ஜூன் 12ம் தேதி நிலவரப்படி, 6,701 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக தொற்று பாதித்தவர்களின் அன்றைய எண்ணிக்கையில் இது 50% ஆகும்.
TN Job “FB Group” Join Now
மாஸ்கோவில் ஒரு வாரத்திற்கு முன் தினசரி பாதிப்பு 2,936 ஆக இருந்தது. நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் அரசு முகக்கவசம் அணிவது, கையுறை அணிவது போன்ற விதிமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டங்கள் முழு வேகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Well use that news tq u to all journalist.