2021 ஆம் ஆண்டின் சிறந்த பௌலராக பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி தேர்வு – ICC அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் அணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கப்படும். தற்போது 2021 ஆம் ஆண்டின் சிறந்த பௌலராக பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ICC விருதுகள்:
இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் ICC ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்கல் , பந்துவீச்சாளர்கள் , கேப்டன், மற்றும் அணிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளையும் அதில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பௌலர்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி சிறந்த கிரிக்கெட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிப்ரவரி மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!
சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது மிகப்பெரிய அளவில் பெரிய வீரராக உருவெடுத்து இருக்கும் அவர் அறிமுகமான போது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் பௌலர் ஷாஹீன் அப்ரிடி கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தனது முதல் ஸ்பெல்லில் இந்திய தொடக்க வீரர்களான KL ராகுல் , ரோஹித் சர்மா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி முக்கிய பங்காக திகழ்ந்தார்.
ICC 2021 ஐசிசி சிறந்த பேட்டராக இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா தேர்வு – ரசிகர்கள் உற்சாகம்!
இத்தொடரில் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தது. ஷாஹீன் ஷா அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக தேர்வாகி உள்ளார். 2021 ஆம் ஆண்டின் ICC பிளேயிங் 11 யில் பாபர் ஆசாம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு பாகிஸ்தான் அணியில் மொத்தம் 3 வீரர்கள் ICC யின் சிறந்த வீரர்களான தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.