கோவிட்-19 தடுப்பூசி இரண்டாம் டோஸ் செலுத்துவதற்கு கூடுதல் நடவடிக்கை – மத்திய அரசு வலியுறுத்தல்!
மாநிலங்களில் கொரோனா இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்களை அதிக அளவில் தூண்டுமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரண்டாம் டோஸ்:
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை பாதுகாக்கும் முக்கிய பணியினை கோவிட் -19 தடுப்பூசிகள் செய்து வருகிறது. முன்னதாக மக்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக மக்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடங்கி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 98 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
வீட்டுக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டி! வங்கிகளின் பட்டியல் இதோ!
கொரோனா தடுப்பூசி மாநிலங்களுக்கு தேவையான அளவு மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர்களுடன் காணொலி மூலம் ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செயல்படுவது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குக் வித் கோமாளி சுனிதா வெளியிட்ட வீடியோ – சும்மா இருக்கும் போது இதுதான் வேலை!
மேலும், தகுதியுள்ளவர்களில் குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு இன்னும் இரண்டாம் டோஸ் செலுத்தப்படாமல் உள்ளது. இரண்டாம் டோஸ்க்காக காத்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு தடுப்பூசிகள் பல மாநிலங்களின் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு தேவையான அளவு மருந்துகள் அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், விரைந்து இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.