‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் புதிய சீரியலில் சரண்யா துராட்டி – ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யா துராட்டி. தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமும் இணைய உள்ளார்.
நடிகை சரண்யா துராட்டி:
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி பின் சீரியலில் நடிக்க தொடங்கியவர் நடிகை சரண்யா துராட்டி. இவர் புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதே அவருக்கு சிறப்பாக பணியாற்றியதை புகழ்ந்து தமிழன் விருது வழங்கப்பட்டது. அதன் பின் அந்த வேலையை விட்டு சில காலம் லண்டனிற்கு சென்று விட்டார். பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்ததை அடுத்து இந்தியாவிற்கு வந்தார்.
விஜய் டிவியின் பிரபல ஹிட் சீரியல் திடீர் நிறுத்தம் – பிக்பாஸ் எதிரொலி! ரசிகர்கள் அதிர்ச்சி!
பின் மீண்டும் செய்தி சேனலில் மூத்த செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தில் நடித்தார். பின் சீரியலில் களமிறங்கிய அவர் 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் சரண்யா விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதனால் விஜய் தொலைக்காட்சியின் சிறந்த புதுமுக நடிகை என்ற விருதும் இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு விஜய் டிவியின் மற்றொரு சீரியல் ஆன ஆயுத எழுத்து என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தார்.
இவர் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற தொடரில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த சீரியலில் சரண்யாவிற்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார். இந்நிலையில் அவர் விஜய் டிவியில் புதிய சீரியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் அவருக்கு அம்மாவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷீலா நடிக்க இருப்பதாக அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.