விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலை விட்டு விலகும் முல்லை – காவ்யா அறிவுமணி ஓபன் டாக்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலகுவதாக செய்தி வெளியாகி வரும் நிலையில் அது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவுமணி என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை அறிவுமணி. அவருக்கு நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் பல முயற்சிகளை செய்தாராம். அப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீகிரேஷன் புகைப்படங்களை பதிவிடுவாராம். அதை பார்த்து அவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு வந்ததாம். அவர் சீரியலில் நடிக்கும் போது அவரது அப்பாவிற்கு பிடிக்காமல் இருந்ததாராம். ஆனால் அவருடைய அம்மாவின் துணையில் அவர் நடிக்க தொடங்கினாராம்.
‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக மாறும் ‘செம்பருத்தி’ ஷபானா – அதிரடியான மாற்றங்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முன்னதாக சில வாய்ப்புகள் அவருக்கு வந்ததாம். ஆனால் அதில் நடிக்காமல் இருந்தாராம். ஆனால் பிரவீன் போன்ற பெரிய இயக்குனர் அழைத்ததால் பாரதி கண்ணம்மாவில் அவர் நடிக்க வந்தாராம். அந்த சீரியலில் 2 ஆண்டுகளாக அவர் நடித்து வந்தாராம். அதன் பின் திடீரென முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இறந்த பின் அவருடைய இடத்திற்கு என்னை அழைத்தார்கள் என சொல்லி இருக்கிறார்.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அது பெரிய ரோல் அதனால் தான் நடிக்க போனேன் என சொல்லி இருக்கிறார்.
முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க என்ன காரணம் என கேட்டதற்கு எனக்கு முக்கிய ரோலில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் அந்த நேரம் இந்த இரண்டு சீரியல்களும் நம்பர் 1 இல் இருந்தது. அதனால் எனக்கு எதை தேர்வு செய்வது என குழப்பமாக இருந்தது என சொல்லி இருக்கிறார். பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து கேள்வி கேட்டதற்கு, நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செட் ஆகி விட்டேன். ஆனால் பெரிய வாய்ப்பு வந்தால் நான் சீரியலில் இருந்து விலகிவிடுவேன் என வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.