உடல்நிலை மோசமான சீரியல் நடிகர் வேணு அரவிந்த் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
சன் டிவி வாணி ராணி சீரியல் மற்றும் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து புகழ் பெற்ற நடிகர் வேணு அரவிந்த் உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
நடிகர் வேணு அரவிந்த்:
நடிகர் வேணு அரவிந்த் (Venu Arvind) இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர். அதன் பின்னர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நடிகை ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். சின்னத்திரையில் அனைத்து மக்கள் மனதிலும் மிகவும் பரிசித்தமானவர்.
சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் – மாமனார் பதிவிற்கு வாழ்த்து! ரசிகர்கள் ஷாக்!
சின்னத்திரை மட்டுமல்லாமல், வெள்ளித்திரையிலும் அலைபாயுதே, வல்லவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார்.
சன் டிவி சீரியல் நடிகைக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் – ரசிகர்கள் வாழ்த்து!
இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. அதனால் அவரை தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் திரை பிரபலங்களும் அவர் மீண்டு வர வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.