இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் அடையாள சான்றாக விளங்குவது ஆதார் கார்டு தான். கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக அனைவர்க்கும் வழங்கப்பட்ட ஆதார் கார்டில் தற்போது உள்ள நடப்பு நிலையை அப்டேட் செய்யுமாறு மத்திய அரசுடு அறிவுறுத்தி வருகிறது. இதனை அரசு இ-சேவை மையங்கள் மூலம் கட்டணமில்லாமல் இலவசமாக புதிப்பித்துக் கொள்ளலாம்.
அதற்கு வரும் ஜூன் 14 வரை அவகாசமும் வழங்கியுள்ளது. ஒரு வேளை அப்டேட் செய்ய தவறினால் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால் அவற்றை மறுத்த UIDAI அமைப்பு, புதுப்பிக்க தவறுபவர்களுக்கு கார்டு ரத்து செய்யப்படமாட்டாது என்று விளக்கம் அளித்துள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு 2024 முக்கிய கேள்விகள் Part 6
அதன்படி ஜூன் 14க்குள் ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றால் அதன் பின்னர் கட்டணம் வசூலிக்கப்பட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இன்னும் 21 நாட்கள் இருப்பதால் விரைவில் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.