தமிழக பேருந்துகளில் கொடைக்கானல் பயணிக்க ஆதார் கட்டாயம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கில் 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொடைக்கானல் பகுதிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஆதார் அட்டைகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைகள்
தமிழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 1 மற்றும் 2 ஆம் வகையின் கீழ் உள்ள 27 மாவட்டங்களில் பேருந்துகள் செயல்பட அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் நேற்று முதல் (ஜூன் 28) 50% இருக்கை வசதிகளுடன் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு கால்நடை மருத்துவமனை காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதே நேரத்தில் தமிழகத்தின் சுற்றுலா தலங்களான நீலகிரி, குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு அவசர காரணங்களுக்காக செல்பவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டங்கள் தோறும் பேருந்து சேவைகள் இயங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள, அவர்களுக்கு ஆதார் அட்டைகள் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதாவது கொடைக்கானலில் இருந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மற்றும் அந்த மாவட்டங்களில் இருந்து கொடைக்கானல் செல்பவர்கள் ஆதார் அட்டைகளை காண்பித்த பிறகே பயணங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் ஆதார் அட்டைகளில் கொடைக்கானல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளாக குறிப்பிடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தவிர பேருந்துகள் புறப்படும் முன்னதாகவே பயணிகளின் ஆதார் அட்டையை சரி பார்த்த பிறகே பேருந்துகளில் ஏற அனுமதிக்க பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.