திடீரென முடிவுக்கு வந்த பிரபல ஹிட் சீரியல்.. கடும் அப்செட்டில் ரசிகர்கள் – டைரக்டர் சொன்ன விளக்கம்!
தமிழ் சின்னத்திரையில் டாப் சேனல்களில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா 2 சீரியல், முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதற்கான சரியான காரணம் குறித்து அந்த சீரியலின் டைரக்டர் வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.
சத்யா 2 சீரியல்
ஜீ தமிழில் TRP-யில் மாஸ் காட்டி வந்த சீரியல் தான் சத்யா சீரியல். இந்த சீரியலின் முதல் பாகம் ஏகப்பட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில், திடீரென முடிக்கப்பட்டதால் பல ரசிகர்கள் மீண்டும் சீரியல் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த சீரியலில் டாம் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆயிஷாவிற்கு பல ரசிகர்கள் இருந்த நிலையில், மீண்டும் கதையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு ஆயிஷா விஷ்ணு ஜோடியை இணைத்து சத்யா 2 சீரியல் தொடங்கப்பட்டது.
அந்த சீரியல் தொடங்கியது முதல் TRPயில் நல்ல இடத்தை பிடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் மீண்டும் ரசிகர்கள் சீரியலை முடிக்க காரணம் கேட்டு சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் கமெண்ட் ஒன்றிற்கு சத்யா சீரியல் டைரக்டர் பதில் அளித்து இருக்கிறார். அதில் எனக்கும் சீரியலை முடிக்க ஆசை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் – இனிமேல் இந்த வசதி கிடையாதா? அதிர்ச்சியில் பயனாளிகள்!!
Exams Daily Mobile App Download
ஆயிஷா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள போகிறார். அதனால் சத்யா 2 சீரியலை முடித்து இருப்பதாக டைரக்டர் பதில் அளித்து இருக்கிறார். இவ்வளவு வெளிப்படையாக டைரக்டர் விளக்கம் கொடுத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் அவர் சொன்ன தகவலின்படி ஆயிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவது உறுதியாகி இருக்கிறது. சீரியல் முடிந்தாலும் ஆயிஷாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கலாம் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.