பள்ளிகளுக்கு திடீரென அறிவிக்கப்பட்ட விடுமுறை – மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!
செப்டம்பர் 16 ம் தேதியான இன்று கனமழை காரணமாக லக்னோவில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
உத்தரபிரதேசத்தில் கனமழை காரணமாக, 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து லக்னோ பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அதிகாரிகள் மூலமாக இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையிலும் வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கான விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மாநிலம் முழுவதும் கனமழைக்கான எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செய்தி அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 34 பகுதிகளுக்கு கனமழை காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளுக்கு மஞ்சள் முதல் ஆரஞ்சு வரையிலான கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பள்ளி மீண்டும் திறப்பு மற்றும் பிற தகவல்களுக்கு, அவர்கள் தங்கள் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தான் நகை வாங்க சரியான நேரம்… ஒரேடியாக சரிந்த ஆபரண தங்கத்தின் விலை!!
Exams Daily Mobile App Download
உத்தரபிரதேசத்தை போல் உத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கனமழை எச்சரிக்கை காரணமாக சார் தாம் பக்தர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக போதுமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் SDRF தொடர்ந்து இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்