தமிழகத்தின் 38வது மாவட்டமாக ‘மயிலாடுதுறை’ உதயம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயமாகி உள்ளது. இது குறித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான எல்லை வரையறை, அரசு அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று முதல் அம்மாவட்டத்தின் நிர்வாக செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்துள்ளார். நடப்பு ஆட்சி காலத்தில் மட்டும் தமிழகத்தில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய மாவட்டம்:
பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பாரபட்சமின்றி கொண்டு சேரும் வகையிலும், நிர்வாக செயல்பாடுகளை எளிமையாக்கும் நோக்கத்திலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு இதுவரை 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. தற்போது 6வது மாவட்டமாக நாகையில் இருந்து 4 முக்கிய வருவாய் வட்ட பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு ‘மயிலாடுதுறை’ மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை – இன்று பிரதமர் துவக்கி வைப்பு!!
இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் அதற்கான எல்லை வரையறை, அரசு நிர்வாக பணியிடங்கள் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அப்பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. தற்போது அது முழுவதுமாக முடிவடைந்து உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் 38வது மாவட்டமாக மயிலாடுதுறையின் நிர்வாக செயல்பாடுகளை இன்று காணொளிக்காட்சி வாயிலாக முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவை தனி மாவட்டங்களாகவும், விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், நெல்லையில் இருந்து தென்காசி மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டங்களாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.