நாடு முழுவதும் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விடுமுறை நாட்கள்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய கல்வி ஆண்டு தொடங்கி இருக்கிறது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் இன்னும் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படவில்லை. சில பள்ளிகளில் தேர்தலுக்குப் பின் முழு ஆண்டு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அதன்படி ஏப்ரல் 9 ஆம் தேதி மகாராஷ்டிராவில் குடி பட்வா மற்றும் கர்நாடகா, ஆந்திர பிரதேசத்தில் உகாதி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம். அதேபோல ஏப்ரல் 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சாபில் முக்கிய அறுவடை திருவிழாவான வைசாகி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அன்றைய தினமும் விடுமுறையாக இருக்கலாம். ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி கடைபிடிக்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு என்பதால் தேசிய விடுமுறையாக கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் ஏப்ரல் 17ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்பட இருப்பதால் அன்றைய தினம் விடுமுறையாகும். மேலும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அன்றைய தினமும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.