மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவுள்ள தேர்களை முன்னிட்டு ஏராளமான பலன்கள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்திருக்கும் பலன்கள்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே நடப்பு தவணைக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டி உள்ளதால் இவர்களுக்கான வீட்டு வாடகை படி மற்றும் இதர சலுகையையும் கூடுதலாக பெறுவார்கள். வரவுள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களை ஈர்க்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
TNPSC தேர்வில் பாஸ் ஆக இது ரொம்ப முக்கியம் – சூப்பர் ஆஃபர்! யூஸ் பண்ணுங்க!
மேலும் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் விரைவில் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக கோரிக்கையாக இருந்து வந்த ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்கள் இறுதியாக வாங்கிய வருமானத்தில் 40 முதல் 45 சதவீதம் வரை பென்ஷனாக கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.