சென்னையில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்தை அடுத்து அமைச்சர் சிவசங்கர் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் உத்தரவு
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பணிமனை கிளை மேலாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கூடுதல் வெயில் சுட்டெரிக்கும் – பொதுமக்களே உஷார்!!
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மாநகர பேருந்துகளுக்கு அமைச்சர் சிவசங்கர் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும் எனவும், மிகவும் மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.