2024 – 25 ஆம் மத்திய பட்ஜெட்டில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் செய்ய இருப்பதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்:
இந்தியாவில் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தற்போது தாக்கல் செய்து வருகிறார். மேலும் இடைக்கால பட்ஜெட்டில் ஏகப்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது அந்த வகையில், 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் செய்ய இருப்பதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அதாவது, கடந்த பத்து ஆண்டுகளில் கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ள நிலையில் மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் செய்யப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், திறன்மிகு இந்தியா திட்டத்தின் மூலமாக 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Join Our WhatsApp
Channel ” for Latest Updates
TNPSC குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!!