புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் தீவிரம் – இந்திய ரயில்வே வாரிய தகவல்!
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை இணைக்கும் பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள் குறித்து இந்திய ரயில்வே வாரியம் புதிய தகவலை தெரிவித்துள்ளது.
பாம்பன் ரயில் பாலம்:
பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தூக்கு பாலத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பாலம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் கடல் பகுதியை இணைக்கும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது, பாம்பன் ரயில் பாலத்தின் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக ரூபாய் 525 கோடியில் புதிய பாலம் அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது.
பெரிய வெங்காயத்தின் விலை அதிரடி உயர்வு – கிலோ ரூ. 54-க்கு விற்பனை!
பாலத்திற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து தீவிர கதியில் நடந்து வரும் நிலையில் தற்போது 92 சதவீத பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டதாக இந்திய ரயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இந்த பாம்பன் ரயில் பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.