விரைவில் முடிவுக்கு வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் – வெளியானது கிளைமேக்ஸ் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கும் பணம் தான் காரணமாக இருப்பதால் மூர்த்தி எடுக்க போகும் முடிவு தான் இறுதி எபிசோடாக இருக்க போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிய இருக்கிறது. இதில் முக்கிய வில்லனாக இருந்த ஜனார்த்தனன் பிரசாந்தால் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து மீண்டு திருந்தி விடுகிறார். மேலும் மல்லி பிரசாந்த் ஜெயிலில் இருப்பதால், தான் செய்தது தான் தவறு என உணர்ந்து விடுகிறார். இந்நிலையில் தனம் நம்ம வீட்டில் நடக்கும் பிரச்சனை அனைத்திற்கும் பணம் தான் காரணமாக இருக்கிறது என யோசிக்கிறார்.
Join Our WhatsApp Group” for Latest Updates
மீனா அப்பா தன்னுடைய மகள் கஷ்டப்பட கூடாது என நினைக்கிறார். முல்லை அம்மா அவள் கஷ்டப்படக்கூடாது என நினைப்பது தான் பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது என மூர்த்தியிடம் சொல்கிறார். அதனால் தம்பிகளுக்கு தனியே வருமானம் வரும்படி செய்கிறார் மூர்த்தி. அதாவது கண்ணன் பேங்க் வேலையும், கதிர் ஹோட்டலையும் கவனித்து கொள்ள, ஜீவா என்ன செய்வார் என யோசனையில் இருக்கிறார்.
பெரிய வெங்காயத்தின் விலை அதிரடி உயர்வு – கிலோ ரூ. 54-க்கு விற்பனை!
அப்போது ஜனார்த்தனன் தன்னுடைய சூப்பர் மார்க்கெட்டை மாப்பிள்ளைக்கு கொடுப்பதாக சொல்கிறார். தம்பிகள் தனி தனியே சம்பாரித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ள, குடும்பம் ஒற்றுமையாக இருக்கிறது. இது தான் இந்த கதையின் முடிவாக இருக்க போகிறது.