ரூ. 1000 உரிமைத் தொகைக்கான முதற்கட்ட பணி முடிவு – ஆக.6 முதல் சார்பார்க்கும்பணி தொடக்கம்!
தமிழகத்தில் ரூ. 1000 உரிமைத் தொகைக்கான முதற்கட்ட பணியில் 75 லட்ச விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் ஆக.6 முதல் சார்பார்க்கும் பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 1000 உரிமைத் தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் மூன்று கட்டங்களாக பொது மக்களின் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்து இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், தமிழகம் முழுவதும் முதல்கட்ட பணியில் தற்போது 75 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் சரிபார்க்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
300 வகையான பூச்செடிகளை வாடகைக்கு விட முடிவு – தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!
மேலும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு குடும்ப தலைவிகள் ரூபாய் 1000 உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவரா என்கிற விவரங்களும் மொபைல் நம்பருக்கு நேரடியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.