பால் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு – ஆக. 1 முதல் அமல்.. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
மாநிலத்தில் அரசாலநகத்தால் விற்பனை செய்யப்படும் நந்தினி பாலின் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பால் விலை:
கர்நாடகாவில் நந்தினி பாலின் விலையை உயர்த்த கோரி விவசாயிகள் மற்றும் பால் கூட்டமைப்பு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக அவ்வப்போது ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நந்தினி பாலின் விலையை ரூ. 3 உயர்த்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி பெற வேண்டுமா? – உங்களுக்கான அரிய வாய்ப்பு!
இதனையடுத்து பால் விலை ஒரு லிட்டர் ரூ. 39க்கு விற்பனையாகவுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள பால் விலை வரும் ஆக.1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை மட்டுமே உயர்ந்துள்ளது. தயிர் உள்ளிட்ட மற்ற பால் சார்ந்த பொருட்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை அதே விலையில் நீடிக்கும் என அரசு அறிவித்துள்ளது.