தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம் – கல்லூரிகளில் மாணவியர் சேர்க்கை 29% உயர்வு!
தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தால் கடந்த ஆண்டு விட இந்த வருடம் கல்லூரிகளில் மாணவியர்களின் சேர்க்க அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுமைப்பெண் திட்டம்
தமிழகத்தில் பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்படி இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி படிப்பை பயின்றால் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழக கலை & அறிவியல் கல்லூரிகளில் மாற்றப்படும் பாட திட்டங்கள்? – உயர்கல்வித்துறையின் அதிரடி முடிவு!
இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமல்ப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வறுமை காரணமாக உயர்கல்வி மேற்கொள்ள முடியாத மாணவியர்கள் உயர்கல்வி படிப்பை மேற்கொள்ளலாம். மேலும் இத்திட்டம் மூலமாக குழந்தை திருமணம் தடுக்கப்படுவதுடன், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய முடிகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இதில் புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 29% அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வறுமை காரணமாக உயர்கல்வியை மேற்கொள்ள முடியாமல் இருந்த மாணவர்களும் புதுமைப்பெண் திட்டத்தால் மீண்டும் உயர்கல்வியை தொடர்ந்து படித்து வருவதாகவும் சட்டப்பேரவையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது .
Exams Daily Mobile App Download