தமிழக கலை & அறிவியல் கல்லூரிகளில் மாற்றப்படும் பாட திட்டங்கள்? – உயர்கல்வித்துறையின் அதிரடி முடிவு!
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் அரசு மற்றும் தனியார் தன்னாட்சி கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் அனைத்தும் உயர்கல்வித்துறையால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டங்கள்:
தமிழக உயர்கல்வித் துறையானது கல்லூரி மாணவர்களுக்கான புதிய பல மாற்றங்களையும், பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் கலை & அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் அனைத்தும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்தது.
தமிழகத்தில் மின் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை – வரவுள்ள புதிய தொழில்நுட்பம்!
இதற்காக, உயர்கல்வித்துறையால் பாடத்திட்ட வடிவமைப்பு குழு ஒன்று பேராசிரியர் ராமசாமி தலைமையில் அமைக்கப்பட்டு, கடந்த ஓராண்டாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான 69 இளங்கலை மற்றும், 155 முதுகலை படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டமானது வரும் ஜூன் மாதம் துவங்கும் புதிய கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பாடத்திட்ட வடிவமைப்பு குழுவினர் 75% பாடங்களை வடிவமைப்பர். கல்லூரிகள் மீதமுள்ள 25% பாடத்திட்டங்களை தாங்களாக வடிவமைத்துக் கொள்ளலாம் என்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் ராமசாமி தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.