சீனாவின் 138 பந்தய, 94 கடன் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி சீன இணைப்புகளுடன் தொடர்புடைய 138 பந்தைய அப்ளிகேஷன், 94 லோன் லெண்டிங் அப்ளிகேஷன்களை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
ஆப்களுக்கு தடை
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின் கீழ், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலம் மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு” ஆகியவற்றுக்கு பாதகமான செயலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் ஏற்கனவே TikTok மற்றும் PUBG போன்ற செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சீன இணைப்புகளுடன் தொடர்புடைய 138 பந்தைய அப்ளிகேஷன், 94 லோன் லெண்டிங் அப்ளிகேஷன்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – 4% DA உயர்வு அமல்!
Follow our Instagram for more Latest Updates
இந்த செயலிகள் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை சீனாவின் ஆதரவுடன் செய்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த செயலிகளை பயன்படுத்தி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதனால் தெலுங்கானா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் மற்றும் மத்திய உளவு அமைப்புகளும் இந்த செயலிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்கள்.
அதனால் மத்திய அரசு உடனே இந்த செயலிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு வெளியிட்ட இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சீன செயலிகளை இனி ஸ்மார்ட்ஃபோன்களில் பதிவிறக்கம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செயலிகளை சுயாதீன வலைத்தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.