TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. Group 4 தேர்வு முடிவுகள் இந்த மாதத்திலா? வெளியான தகவல்!!
TNPSC Group 4 தேர்வுகளுக்கான முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNPSC தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மருத்துவதுறையில் பணியாற்ற அரிய வாய்ப்பு – நாளை (ஜன.27) வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு காரணமாக 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் இத்தேர்வை எழுதிய 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இம்மாதம் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதன்படி குரூப் 4 தேர்வு நடைபெற்று எவ்வளவு மாதங்கள் கடந்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் அறிவித்த தேதியில் இன்னும் வெளியாகததால், தேர்வர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்த நிலையில் TNPSC Group 4 தேர்வு முடிவுகள் வருகிற பிப்ரவரி மாதத்தில் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.