“எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் 812 ஆசிரியர்கள் தேர்வு – தமிழக அரசு கவுரவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் 1 – 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் கௌரவிக்கவுள்ளார்.
எண்ணும் எழுத்தும்:
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. அத்தகைய சூழலில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் வாயிலாகவும் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் கற்றல் முறையில் மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் கேள்விக்குறியானது.
Follow our Twitter Page for More Latest News Updates
அத்துடன் ஆரம்ப நிலை மாணவர்கள் பல நாட்களாக வீட்டிலேயே இருந்ததால் எண் மற்றும் எழுத்துக்களை மறக்கும் நிலைக்கு ஆளாகினர். அதனால் மாணவர்களுக்கு அடிப்படை எண் மற்றும் எழுத்துக்களை திறம்பட கற்பிக்கும் நோக்கில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எண் மற்றும் எழுத்துக்களை கற்பிக்க சிறப்பு ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஜன.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த ஆசிரியர்களில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை கவுரவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 812 ஆசிரியர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாளை (ஜன. 26) குடியரசு தின விழாவன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கவுரவிப்பு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.